திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுய உதவிக் குழுவுக்கு ரூ.16 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று (ஜன.2) நடைபெற்றது. உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், கூட்டுறவு சங்கத் தலைவர் பாஸ்கரன், இயக்குநர் பொன்னுசாமி ராம்குமார், வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.