அம்பத்தூர், ஆக. 24- திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 15ஆவது மாவட்ட அளவி லான இளையோர் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், ஏறி பந்து ஆகிய போட்டிகள், 8, 10, 12, 14, 16, 18 மற்றும் 26 என வயது வாரியாசுவும் மற்றும் அனைத்து வயதின ரும் பங்கேற்கும் போட்டி யும் நடைபெற்றன. போட்டி களை தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளர் லதா துவக்கி வைத்தார். இளையோர் தடகள போட்டியில் பிரேம்குமார் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜ், சங்கத்தின் செயலாளர் மோகன் பாபு ஆகியோர் பரிசுகளை வழங் கினர். இதில் வெற்றி பெற்றவர் கள் அடுத்த மாதம் மாநில அளவில் ஈரோட்டில் நடை பெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.