தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள சந்தனப்பள்ளி ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணியை 14.74 கோடியே 86 ஆயிரம் மதிப்பீட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார், தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.