ராணிப்பேட்டை,செப்.23 - ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பேடர் லெதர் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் 4 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 13 பேர் கடந்த வெள்ளி யன்று (செப். 20) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் இயங்கி வந்த பேடர் லெதர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வந்த தொழிலாளர்கள் 13 பேர் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 13 தொழிலாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 1 முதல் இரவு நேர பணி வழங்கியது. இரவு நேர கூடுதல் படியும் வழங்கவில்லை. செங்கல்பட்டில் இருந்து ராணிப்பேட்டைக்கு வாகன ஏற்பாடு சரியில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த நிர்வாகம் கடந்த செப்டம் பர் 19 அம் தேதி முதல் போக்குவரத்தை ரத்து செய்து 13 தொழி லாளர்களையும் பணி நீக்கம் செய்து விட்டது. தகவல் அறிந்து சிப்காட் காவல்துறையினர் திங்க ளன்று (செப். 23) உதவி ஆய்வாளர் கோபி, ரேணுகோபால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி கள் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்பட வில்லை.