மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை-செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் எஸ்.வி.எஸ்.மணியின் 12வது ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று (ஜன.21) அனுசரிக்கப்பட்டது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர் எஸ்.வி.எஸ். மணியின் மனைவி பத்மாவதி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், பகுதிச் செயலாளர்கள் இ.மூர்த்தி (தி.நகர்), இ.ரவி (விருகை), மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்கரன், எம்.ரெங்கசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.