சென்னை,பிப்.4- சென்னையில் 1,243 வாக்குசாவடிகள் பதற்ற மான வாக்குச்சாவடிகளாககண்டறியப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும்தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்ட னர். பின்னர் சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் லைவ் ஸ்டீமிங் (நேரலையில்) மூலம் கண்காணிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி தகவல் தெரிவித்தார்.