districts

சென்னை முக்கிய செய்திகள்

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஆவடி, பிப்.28- ஆவடி அடுத்த பாரி வாக்கம் ஊராட்சி பகுதி யைச் சேர்ந்தவர் இளங்கோ.  இவரது மகன் சுஜித் (7). இவர் அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை  பாரிவாக்கம் ஏரியில் மீன் பிடிக்கச்சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி காவல் துறையினர் சுஜித் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். 

புதிய ஆடை தொகுப்புகள்

சென்னை, பிப்.28- ‘கில்லர்’ என்ற பெயரில்   வெளிவந்துள்ள  டெனிம்  ஆடைகளுக்கு இளைஞர் கள் இடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவன மான கேவல் கிரண்  குளோத்திங் நிறுவனம் இளைஞர்களை வெகுவாக கவரும் வகையில் 1000க்கும் மேற்பட்ட மாடல் களுடன் ‘இலையுதிர்-குளிர்கால 2024’ தொகுப்பு  என்னும் ஆடை ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. 

ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை,பிப்.28- ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் மாவட்டச் செயலாளர் விவேகானந்தன், கடந்த ஜன 31அன்று இரவு, 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா, காவேரிப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் தீபிகாவின் கணவர் முருகன், பிரபாகரன், வினோத், குமார், சுரேஷ் ஆகிய 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 10 பேரையும் புன்னை கிராமத்தில், டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பு என்ற சதீஷ் குமாரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய  மாவட்ட ஆட்சியர் வளர்மதி  உத்தரவிட்டார். இதை அடுத்து,  11 பேரும் புதன்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.