districts

img

29 நிமிடத்தில் 108 யோகாசனம்: உலக சாதனை படைத்த மாணவன்

சிதம்பரம், ஏப். 29- சிதம்பரத்தில் 29 நிமிடத்தில் 108 யோகாசனம் செய்து பள்ளி மாணவர் உலக சாதனை படைத்துள்ளார் சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி ஹேமா. இவர்களது மகன் சக்திவேல் (13). இவர் காமராஜர் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே யோகாசனம் கற்று வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தில் வெர்ட்சு புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் யோகாசன சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவன் சக்திவேல் கலந்து கொண்டு 29 நிமிடம் 47 வினாடிகளில் 108 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளதாக அதன் இயக்குனர் சுரேஷ்குமார், இணை இயக்குனர் சந்தோஷ் ஆகியோர் அறிவித்தனர். சாதனை படைத்த மாணவனை சர்வமங்களா அகாடமி நிறுவனத்தின் நிறுவனர்கள் பாலாஜி, சுகாந்தினி, யோகா ஆசிரியர் தெய்வானை, காமராஜர் பள்ளியின் தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.