districts

img

ராணிப்பேட்டையில் நீட் தேர்வு: 1008 மாணவர்கள் எழுதினர்

ராணிப்பேட்டை,மே 5 - மருத்துவ படிப்பிற்கான நுழைவு நீட் தேர்வு ஞாயிறன்று (மே.5) ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள டிஏவி பள்ளியில் 528 மாணவர்கள் மற்றும் சோளிங்கர் கிருஷ்ணாவரம் பகுதியில் உள்ள வித்ய பீடம் பள்ளியில் 480 மாணவர்கள் என மொத்தமாக 1008 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். தேர்வு மையங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து எளிய முறையில் பயணம் செய்து வருவதற்காக சிறப்பு பேருந்து சேவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் அருகாமையில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.