சென்னையில் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை, நவ. 13- சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்றும், தூய்மை பணியில் 19 ஆயிரத்து 600 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளியன்று பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவு வரை பட்டாசு கள் வெடித்ததில் சாலைகளில் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள் ளன. சென்னையில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாந கராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவுகளை கொண்டு செல்வதற்காக மண்டலத்திற்கு 2 வாகனங்கள் என மொத்தம் 30 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. ஞாயிறன்று காலை முதலே பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து 3 நாட்கள் வரை நடைபெறும். இதில் 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்க வாய்ப் புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப் பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் தொழில்நுட்பத்தோடு அழிக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் உலாவிய எலி: கேண்டீனை மூட உத்தரவு
சென்னை, நவ. 13- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயபுரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான மருத்துவ மனைகளில் ஒன்றான இங்கு, சென்னை மக்கள் மட்டுமல்லாது, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தனியாருக்கு சொந்தமான கேண்டீன் உள்ளது. அங்கு ஞாயிறன்று விற்பனை செய்யப்பட்ட திண்பண்டங்களான பஜ்ஜி, வடைகளின் மீது எலி ஏறிச்செல்லும் காட்சிகளை பொது மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். மேலும் இது குறித்து கேண்டீன் உரிமை யாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கேண்டீன் சார்பில் அது விற்பனைக்கு அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எலி உண்ட திண் பண்டங்களை கேண்டீன் பணியாளர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி யுள்ளனர். இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்பண்டங்களை எலி உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, முதல்வர் பாலாஜி கேண்டீனை மூட உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
பட்டாசு விபத்தில் 4வயது சிறுமி பலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
சென்னை, நவ. 13- பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத் தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத் தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில், பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 4 வயது சிறுமி நவிஷ்கா உயிரி ழந்தார். இந்த விபத்து குறித்து வாழைப் பந்தல் போலீசார் சிறுமியின் பெரியப்பா விக்னேஷின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறுமி நவிஷ்காவின் குடும்பத்தின ருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தி னருக்கும், அவருடைய உறவினர்களுக் கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்வகிறேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷிற்கு ரூ.1 லட்சமும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்”.
விதிமீறி பட்டாசு வெடித்ததாக 580 வழக்குகள் பதிவு
சென்னை,நவ.13- சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 580 வழக்குகள் பதிவு. தமிழகத்தில் ஞாயிறன்று பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காற்று மாசு உள்ளிட்ட காரணங்களுக்காக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்ணாநகர் கார் விபத்தில் இருவர் பலி
சென்னை,நவ.13- சென்னை அண்ணாநகரில் திங்களன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய கார் சாலையில் சென்று கொண்டிருந்த வர்கள் மீது பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழப்பு 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஆசிப் எனத் தெரியவந்தது. மேலும் ஆசிப் என்பவர் கஞ்சா போதையில் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இவர் ஏரோநாட்டிகல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.அதிகாலை 2.30 மணியளவில் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது, கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்தது அம்பலமாகி யுள்ளது.கார் விபத்து நடந்தபோது ஆசிப் உடன் வந்த ரமணா மற்றும் பெண் தோழி என 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குன்றத்தூர் அருகே 2 நிறுவனங்களில் தீ விபத்து
அம்பத்தூர், நவ. 13- குன்றத்தூர் அருகே திருமுடி வாக்கத்தில் தனியாருக்கு சொந்த மான அட்டை கம்பெனி உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் கம்பெனிக்கு விடு முறை அளிக்கப்பட்டது. இதனால் கம்பெனியில் யாரும் இல்லை. இந்நிலையத்தில் ஞாயிறன்று இரவு கம்பெனியில் திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென எரியத் தொடங்கி யது. தீ அருகில் உள்ள அலுமினியம் கோட்டிங் கம்பெனிக்கும் பரவியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தி னர் குன்றத்தூர் காவல் நிலை யத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் பூந்தமல்லி, மதுர வாயல், ராமாபுரம், குரோம் பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதி களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் 40 வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அட்டை கம்பெனி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. அதேபோல் அலு மினியம் கோட்டிங் கம்பெனியில் உள்ள ரசாயன கலவைகள், இயந்திரங்கள் தீயில் எரிந்து நாச மானது. இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 24 தீ விபத்துகள் 101 பேர் காயம்
கடலூர்,நவ.13- கடலூர் மாவட்டத்தில் தீபாவளியன்று மொத்தம் 24 இடத்தில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் 101 பேர் காயமடைந்தனர். ஞாயிறன்று பொதுமக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் 24 தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் 16 கூரை வீடுகள், 5 தென்னை மரங்கள்,மூன்று குப்பைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த தீ விபத்துக்கள் பெரும்பாலும் ராக்கெட் வகை பட்டாசுகளால் ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தீவிபத்துகளை அந்தந்த பகுதி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துகளில் 82 ஆண்கள் 19 பெண்கள் என மொத்தம் 101 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களில் 12 தீயணைப்பு நிலையங்களுக்கு தீ விபத்து குறித்து அழைப்புகள் கிடைக்கப்பெற்று, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.
இன்று மின் நிறுத்தம்
திருவண்ணாமலை,நவ.13- திருவண்ணாமலை மாவட்டம். கீழ்பென்னாத்தூர் பகுதியில் இன்று(நவ.14) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் செவ்வாயன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர்,கருங்காலி குப்பம், கரிக்கலாம்பாடி,கணியாம்பூண்டி, சிறுநாத்தூர்,குண்ணங்குப்பம்,கல்பூண்டி, கார்ணாம்பூண்டி,சோமாசிபாடி,கடம்பை, நல்லான்பிள்ளை பெற்றாள், காட்டுசித்தா மூர்,ஆராஞ்சி,கழிக்குளம்,சிங்கவரம், கெங்கனந்தல்எலந்தம்புறவடை, உட்பட 32 ஊர்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக திருவண்ணாமலை கிழக்கு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நியாய விலை கடை ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
சென்னை, அக்.14- தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு திருச்சியில் நவ.19 (ஞாயிறு) கூடுகிறது. சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம், கே.ஏ.அனந்தநம்பியார்நகர், கரூர் பை பாஸ் சாலை, சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி என்ற முகவரியில் நடைபெறும். இதில் மாவட்டக்குழு சார்பில் தலா 2 விற்பனையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும ்என்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கம்
கோவை, நவ,13- கோயம்புத்தூரில் வருகிற 17ம் தேதி தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடத்த உள்ளன. மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு வல்லுநர்கள் தொழில்நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள் வளர்ச்சி. புதிய முதலீடுகள். பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்கு குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள முன்பதிவு செய்வதற்கான இணையதள இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles). மேற்படி கருத்தரங்கில் ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறு மாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.