திருவண்ணாமலை, நவ.1- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளுக்கு ஊதிய நிலுவை உடனடியாக வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரணமல்லூர் ஒன்றியக் குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய அமைப்பாளர் கே. பெரு மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்க டேசன், சேத்துப்பட்டு வட்டார செயலாளர் கே.அண்ணாமலை, பெரணமல்லூர் ஒன்றிய நிர்வாகி புவனேஸ்வரி, விவ சாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பிர பாகரன், கட்டுமானத் தொழிலாளர் சங்க செயலாளர் முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி இரா. ராஜசேகரன், சிபிஎம் பெரணமல்லூர் ஒன்றியச் செய லாளர் ந.சேகரன், பேரூராட்சி கவுன்சிலர் மா. கௌதம்முத்து ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். நூறு நாள் வேலை திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி நூறு நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சிறப்பு வேலை அட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.