அண்ணாநகர் பகுதி, பி.பி.தோட்டம் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பு மீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஞாயிறன்று (செப்.22) ஸ்கைவாக் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் அண்ணாநகர் பகுதி தலைவர் பரந்தாமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வெ.தனலட்சுமி, அண்ணாநகர் பகுதிச் செயலாளர் நாகரத்தினம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் துணைச் செயலாளர்கள் ஆ.பிரியதர்ஷினி எம்.சி., எல்.விக்னேஷ்வரன், பகுதிச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.