சென்னை, ஏப். 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை வங்கி அரங்க மூத்த தோழர் அகோர பாண்டியன் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தோழர் எ.சண்முகம், சென்ட்ரல் வங்கி எஸ்சி,எஸ்டி ஊழியர் நலச் சங்க பொதுச் செயலாளராகவும், அதிகாரிகள் இயக்கத்திலும் செயல்பட்டவர். இவர்கள் இருவரும் அண்மையில் மறைந்தனர். கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கிய இவ்விருவரின் படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம் செவ்வாயன்று (பிப்.18) சென்னை யில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா பேசுகையில், அன்பின் அரவணைப்பில் இயக்கத்தை ஆட்கொண்டவர் அகோர பாண்டியன். தோழர்களோடு ஒருங்கி ணைந்து செயல்பட்டவர் தோழர் சண்முகம் என்று கூறினார். சாதி, மத வெறுப்பு அரசியலை சங் பரிவாரம் பரப்பிவரும் சவால் மிகுந்த சூழலில், நடுத்தர வர்க்க ஊழி யர்கள் மத்தியில் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான உத்வேகத்தை இந்தத் தோழர்களது சலிப்பில்லாத உழைப்பும், நம்பிக்கை மிகுந்த செயல்பாடும் வழிகாட்டும் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்விற்கு வங்கி அரங்க இடைக் கமிட்டி செயலாளர் எஸ்.வி.வேணு கோபாலன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலக்குழு உறுபினர் ஐ.ஆறுமுகநயினார், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சர்வே சன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணை செயலாளர் சி.பி.கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.