‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று தெருவோர வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கி, வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆக.6 அன்று சென்னையில் ‘தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார மாநாடு’ நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தை ஞாயிறன்று (ஆக.4) ஆயிரம் விளக்கு பகுதியில் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வில்லிவாக்கத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.