காஞ்சிபுரம், மே.10 - காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாசுதேவன் - சரிதா தம்பதியின் மகன் மதன் 80 விழுக்காடு பார்வை திறன் குறைபாடு உள்ளவராக உள்ளார். தனியார் ஆங்கிலப் பள்ளியில் பயின்று வந்த இவர் மாற்று சான்றிதழ் வாங்கி செல்லுமாறு கூறி யதால் மனம் உடைந்துள் ளார். பல முயற்சிகள் செய்தும் எந்த பள்ளிகளி லும் மதனை சேர்க்க மறுத் துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் 10ஆம்வகுப்பு சேர்த்து படிந்து வந்துள்ளார். பார்வை திறன் குறை பாடு உள்ள நிலையிலும் பள்ளி ஆசிரியர்களின் முழு மையான ஒத்துழைப் போடும், பெற்றோரின் உதவியோடும், ஆர்வத்து டன் கல்வி பயின்று வந்தா வர். தற்போது நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று தமிழில் 87, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 100,அறிவியல் 96, சமூக அறிவியலில் 97, என மொத்தம் 477 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவ னாக சாதனை படைத்துள் ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவருக்கும், கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். தான் ஒரு கல்லூரி பேரா சிரியராக பணிபுரிய வேண்டும் என்பது லட்சிய மாக கொண்டுள்ளதாக அம்மாணவர் தெரிவித்தார்,