ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டமுகாம் நெமிலி ஒன்றிய தலைவர் பி. வடிவேல் தலைமையில் வெள்ளியன்று (ஜூலை 12) நடைபெற்றது. நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் தக்கைப்பூண்டு விதைகள், பண்ணை இயந்திரங்கள், நெல் விதைப்பு கருவி, துவரை வரப்பு பயிர் ஆகிய இடுப்பொருட்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.