districts

நிறுத்தப்பட்ட மினி பேருந்தை மீண்டும் இயக்க கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜன.28 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடத்திலிருந்து மயிலக்கோயில், தண்டேச நல்லூர், ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்டபுரம், பில்படுகை உள்ளிட்ட கிரா மங்கள் வழியாக அளக்குடி கிராமத்துக்கு கடந்த ஒரு வருடமாக மினி பேருந்து ஒரு நாளைக்கு 14 முறை வீதம் வந்து சென்று கொண் டிருந்தது.  இந்நிலையில் இந்த மார்க்கத்தில் வந்து கொண்டி ருந்த மினி பேருந்து சாலை வரி கட்டாததால், சாலை போக்குவரத்து அதிகாரியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மினி பேருந்தை இயக்குவதற்கு தடை விதித்தார். இந்நிலை யில் கடந்த 15 நாட்களாக கிரா மப் பகுதிகளுக்கு பேருந்து சென்று வராததால், தினந் தோறும் கொள்ளிடம் மற்றும்  சீர்காழிக்கு வந்து செல்லும்  சுமார் 15-க்கும் மேற்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த பொது மக்கள் அவதியடைந்து வரு கின்றனர். இதனால் அளக்குடி, நாணல்படுகை, கோதண்ட புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கொள்ளி டம் பிஎஸ்என்எல் அலுவல கம் அருகில், பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.