சீர்காழி, ஜன.28- மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் அரசு நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இக்கடை யின் மூலம் இந்த கிராமத் தைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அர சின் குடிமைப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான அத்தியா வசியப் பொருட்கள் இது வரை வழங்கப்படாத நிலை யில் விடுமுறை தினமான வெள்ளியன்று கடை திறக்கப் பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் சிறு, சிறு வண்டு களுடனும் பழுப்பு நிறத்தில் புழுக்களுடனும் இருந்ததால் கிராம மக்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களா கவே அப்பகுதி மக்களுக்கு வண்டுகள் நிறைந்துள்ள அரி சியை வழங்குவதாகவும், இதனை சமைத்து உண்ப தற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலை களில் கொட்டியும் கோழிகள் கூட இந்த அரிசியை உண்ப தில்லை என்றும் வேதனை யுடன் தெரிவித்தனர். ஓதவந்தான்குடி கிரா மத்தைச் சேர்ந்த அனைவருமே விவசாயக் கூலித் தொழி லாளர்கள் என்பதால் அரசு வழங்கும் அரிசியையே நம்பி உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதால், ஒரு வேளை உணவைக்கூட நிம்ம தியாக சாப்பிட முடியாத நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர். எனவே தர மான அரிசியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.