சீர்காழி, பிப்.1 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் திங்களன்று சம்பா அறு வடை செய்த நெல் மூட்டை களை கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத் தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிர காஷ் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல் கொள்முதலை துவக்கி வைத்தார். கொள்மு தல் நிலைய ஊழியர் விஜய காந்த் மற்றும் விவசாயிகள், ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் கொண்ணகாட்டு படுகை, கீரங்குடி, சிதம்பர நாதபுரம், ஆனந்தக்கூத்தன், சோதியக்குடி, சரஸ்வதி விளாகம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்த சம்பா நெல் மூட்டை களை சிரமமின்றி கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் இந்த நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட் டுள்ளது என ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தெரி வித்தார்.