சிவகாசி, ஜூன் 6- அரசுப் போக்குவரத்து தொழிலாளர் (சிஐடியு) சங்க 25- ஆவது ஆண்டு வெள்ளி விழா எழுச்சியுடன் நடைபெற் றது. இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்து டன் கலந்து கொண்டனர். சிவகாசியில் நடைபெற்ற பேரவைக்கு மண்டலத் துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத் துரை வரவேற்றார். தொழி லாளர்களின் உணர்ச்சிமிகு கோஷங்களுக்கிடையே செங்கொடியை எஸ்.சுதா கரன் ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.மகாலட்சுமி துவக்க வுரையாற்றினார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே. பாலபாரதி, தமுஎகச மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், சிஐ டியு மாவட்ட உதவித் தலை வர் எம்.அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐ டியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் நிறைவுரை யாற்றினார். பேரவையில் சங்கத்தை பதிவு செய்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். அவர் களுக்கு விருது வழங்கப்பட் டது. தேசிய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் -சான்றிதழ்கள் வழங்கப்பட் டது. மத்திய சங்கத் தலை வர் ஏ.சுந்தர்ராஜ் நன்றி கூறி னார்.
மேலும் உத்தண்ட காளி யப்பனின் இசை, குழந்தை களின் நடன நிகழ்ச்சி, ம. வீரையாவின் மந்திரமா? தந்தி ரமா? நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து 25 ஆண்டுகள் இயங்கி வருவது சாதாரண விஷயம் அல்ல. தொழிலா ளர்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங் களை நடத்தி அதில் வெற்றி பெற்ற அமைப்பாக திகழ்வது சிஐடியு தான். போக்குவரத்து துறை யானது தொழிலாளி மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. அவர் பாதிக்கப்பட்டால், அக்குடும்பமே பாதிப்பை சந்திக்கும். அரசுத் துறை யாக இருப்பதால் தான் இல வசப் பயணத்தை அறிவிக்க முடிகிறது. சாதாரண கட்டு மான பெண் தொழிலாளர் கள், பெண் வியாபாரிகள் இல வசப் பயணத்தால் பயன் பெற்று வருகின்றனர். ஒன் றிய பாஜக அரசு, எல்.ஐ.சி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறைகளையும் விற்று வருகிறது. வேலை நிறுத்தம் செய்தால் மக்க ளுக்கு பாதிப்பு என முதலா ளித்துவ பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட் டத்திற்கு எப்போதும் பொது மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் என்றார்.
கே.பாலபாரதி பேசுகை யில், புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஜாக்கிசான், உலக நாடுகள் முழுவதும் சென் றுள்ளேன். ஆனால், பெரிய அளவில் மரியாதை உள்ளது கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தான் எனவும், அக்கட்சி யில் விரைவில் உறுப்பினரா வேன் எனவும் கூறியுள்ளார். மொழியே இல்லாமல் திரையின் மூலம் மக்களைச் சிரிக்க வைத்த சார்லி சாப் ளின், ஏழை மக்களின் வாழ் வில் மாற்றத்தை கடவுளால் கொண்டு வர முடியாது. கம்யூனிஸ்ட்டுகளால் தான் முடியும் என கூறினார். தலைசிறந்த ஓவியர் பிகாசோ, வறுமையை விரட்டுவது சோசலிசம் தான் எனக் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு உயிரிழப்புகள் வந்த போது, அதை திறமையாக கை யாண்டது வடகொரியா, சீனா, கியூபா போன்ற சோச லிச நாடுகள் தான். இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கையால் பண வீக்கம் அதிகரித்து வருகிறது. இதை பிரதமர் மோடியால் மாற்ற முடியாது. எனவே, பல்வேறு தந்திரங்களை பாஜகவினர் கையாள்கின்ற னர். தனியாரிடம் விற்பனை செய்ய இருந்த விமான நிலை யத்தை கேரள இடதுசாரி அரசு விலைக்கு வாங்கி, பொதுத்துறையை பாது காத்துள்ளது. இதுதான் கேரள மாடல் ஆகும். தமி ழகத்திலும் போக்குவரத்து பொதுத்துறையாக நீடிப்ப தற்கு சிஐடியு தொடர்ந்த நடத்தி வரும் போராட்டங் கள் தான் காரணம் என்றார்.