districts

img

அக்னிபாத் திட்டத்திற்கு பரவும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் ஆவேச போராட்டம்

சிவகங்கை, ஜூன் 23- இளைஞர்களின் ராணுவ வேலை வாய்ப்புக் கனவை அழித்து, ராணுவத்தை ஆர்எஸ்எஸ்மயமாக்கும் வகையில் ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்தும் இத்திட்டத்தை உட னடியாக கைவிடக்கோரியும் நாளுக்குநாள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்  தில் பல்வேறு அமைப்பினர் போராட்ங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் மணியம்மா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ. லாசர், சிபிஎம் மாவட்ட செயலாளர் தண்டி யப்பன், சங்க மாவட்டத் தலைவர் முத்து கருப்பன், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம், பூவந்தி  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங் கம் விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் பேசினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  இளையான்குடியில் தாலுகா கமிட்டி செய லாளர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி பேசினர். 

பழனி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பழனி நகர் ஒன்றியம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றி யக்குழு சார்பில் பழனி குளத்து ரவுண்டானா வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளைய பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியச்செயலாளர் சிவா, மாவட்  டக் குழு உறுப்பினர்கள் சுரேஷ் மாரிக்கண்ணு, விஜயகுமார் மற்றும் ஜீவதுரை ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர்க்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜ மாணிக்கம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ராமசாமி, நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பகத்சிங் ஆகி யோர் பேசினர்.

பரமக்குடி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக பரமக்குடி பேருந்து நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா  பொருளாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தட்சிணா மூர்த்தி தாலுகா செயலாளர் முனியசாமி, அழகுராஜா, மாரிமுத்து, ராஜேஷ் ஆகி யோர் பேசினர்.

கடலாடி
அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கி ணைப்புக் குழு சார்பாக கடலாடியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் வி.மயில்வாகனன், விதொச மாவட்டச் செயலாளர் கணேசன் நவநீதகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர்.

சிஐடியு
சிஐடியு சார்பாக இராமநாதபுரம் அரண் மனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார் . மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஏ. சந்தா னம், சுடலைக் காசி, வாசுதேவன், பாஸ்க ரன் ஆகியோர் பேசினர்.  சிஐடியு கன்வீனர் எம்.சுப்பிரமணியன் தலைமையில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத்தலைவர் எம்.மகாலட்சுமி, சங்க நிர்வாகிகள் ஏ.ராமர். ஜி.கணேசன், ஆர்.எம்.மாரியப்பன், பிச்சைக்கனி, திரு மலை மற்றும் பலர் பேசினர்.

மதுரை
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கங்  கள் சார்பில் சமயநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க பகுதி தலை வர் க.ராகுல்ஜி தலைமை வகித்தார். வி.தொ.ச மாநிலத் தலைவர் ஏ. லாசர், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். கார்த்திக், வி.தொ.ச மாவட்டத்தலைவர் ஏ. உமா மகேஸ்வரன், செயலாளர் சொ.பாண்டியன், பொருளாளர் ஜெ.காசி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.தமிழரசன், பொரு ளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.