districts

img

ந்திய விடுதலைப் போரில் தமிழகம் என்ற அலங்கார ஊர்திகள் திங்களன்று மாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளிக்கு வருகை

இந்திய விடுதலைப் போரில் தமிழகம் என்ற அலங்கார ஊர்திகள் திங்களன்று மாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளிக்கு வருகை தந்தது. இந்த வாகனங்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் மலர் தூவி வரவேற்றார். பிப்ரவரி 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் பொது மக்கள் பார்வைக்காக இந்த வாகனங்கள் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். திருப்பூர் மாவட்ட மக்கள் இந்த வாகனங்களைக் கண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைவர்கள், வீரர்கள் பங்கைக் கண்டு களிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.