சிவகங்கை, பிப்.18- தேசத்திற்கு அந்நிய செலவாணி ஈட்டித்தரும் சிவ கங்கையில் உள்ள கிராபைட் தொழிற்சாலைக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தி தொழிற் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். சிவகங்கை அருகே 900 ஏக்கர் பரப்பளவில் கிராபைட் கனிமம் கிடைத்து வருகிறது. கிராபைட் கனிமம் உலக அள வில் இரண்டாம் தர வாய்ந்த தாக உள்ளது. இதனை கருப்பு தங்கம் என்று அழைக் கிறார்கள். உலகம் முழு வதும் இதன் தேவை அதிக ளவில் உள்ளது. 100 வகை யான பொருட்களை தயா ரிப்பதற்கு உப பொரு ளாக கிராபைட் கனிமம் பயன்படுகிறது. ஜெனரேட் டர், விமானம், ராணுவ தள வாடங்கள் தயாரிப்பதற்கு உப பொருளாக கிராபைட் பயன்படுத்தப்பட்டு வரு கிறது .இந்த கிராபைட் கனி மத்தை பயன்படுத்தி சிவ கங்கையில் ஆயிரம் கோடி திட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உரு வாக்கும் திட்டத்தை உரு வாக்குவோம் என்று கடந்த காலத்தில் அரசியல்வாதி கள் வாக்குறுதி அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சிஐடியு ஆகிய வற்றின் தொடர் போராட்டம் மற்றும் வலியுறுத்தலால் தற்போது கிராபைட் கனிமம் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரில் கிராபைட் கனிமத்தின் 94 சதம், 84 சதம், 91 சதவீத கிராபைட் கனி மத்தை ரூ. 59 ஆயிரத்து 800-க்கு வாங்கிக் கொள்வதாக டெண்டர்விட்டு, ஆர்கே என்டர்பிரைசஸ் கொட்டே ஷன் போட்டு கொள்முதல் செய்வதாக அறிவித்திருக் கின்றனர்.கடந்த 10 ஆண்டு களாக அதிமுக ஆட்சி காலத் தில் கிராபைட் கனிமம் பல மடங்கு குறைந்த விலைக்கு விற்று பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். தற் போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்பு இதில் பல் வேறு அமைப்பினர் தலை யிட்ட பின்பு இதன் விலை ரூ.59 ஆயிரத்து 800- க்கு விற்றுள்ளனர். இந்த தொழிற் சாலை இருப்பதினால் இந்த கிராபைட் கனிமத்தின் வழி யாக இந்திய தேசத்திற்கு அன்னிய செலவாணி கிடைக்கிறது .தொழில் மூல மாக ஊராட்சிக்கு தொழில் வரி வருவாய் கிடைக்கிறது. இதுபோன்ற பல்வேறு வரு வாயை ஈட்டித்தருகிறது. அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது . ஆனால் தொழிற் சாலைக்கு செல்லக்கூடிய நான்கரை கிலோமீட்டர் சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது.எனவே சாலையை சீர மைக்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் கார்த்திகேயன், கிளைச் செயலாளர் குமார், கிளைத் தலைவர் பாலு ,காளிதாஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் உடனே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குந ருக்கு தொலைபேசி மூல மாக தகவல் தெரிவித்து, இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.