சிவகங்கை, ஜூன் 1- எர்ணாகுளம் - வேளாங் கண்ணி விரைவு ரயில் மானா மதுரையில் நின்று செல்லக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ரயில்வே அதிகாரியிடம் மனு அளித்த னர். மானாமதுரை வழியாக செல்கிற எர்ணாகுளம்- வேளாங் கண்ணி விரைவு ரயிலை மானாமதுரைரயில் நிலை யத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில்வே உயர் அதிகாரிக ளுக்கு ரயில் நிலைய மேலா ளர் வழியாக கோட்டமேலாள ருக்கு மனு கொடுத்து வலி யுறுத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மனு அளித்தனர்.