சேலம், ஏப்.18- குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வடி கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத மல்லியகுந்தம் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவ னயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத் திற்குட்பட்ட மல்லியகுந்தம் ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை உள் ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர் வாகம் உடனடியாக மேம்படுத்த நடவ டிக்கை எடுத்திட வேண்டும். பழிவாங் கும் நடவடிக்கையாக துண்டிக்கப்பட்ட குடி நீர் இணைப்பு அனைத்தையும் உடனே மீண்டும் வழங்க வேண்டும். தாவானூர், ஜீவா நகர் பகுதிகளில் குடிநீர் மேல் நிலைத் தொட்டி அமைத்து குடிநீர் விநி யோகத்தை முறைப்படுத்த வேண்டும். கழிவுநீர் வடிகால் கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி திங்களன்று மல்லியகுந்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செய லாளர் அம்மாசி தலைமை வகித்தார். இதில், மூத்த தலைவர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராம மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி.மணி முத்து, மேச்சேரி பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி, சிபிஐ நிர்வாகி எஸ்.காத்த முத்து, விசிக ஒன்றிய துணை செயலாளர் கே.சின்னதுரை உ பலர் கலந்து கொண்டனர்.