சிவகங்கை, பிப்.25- தமிழ்நாடு நெடுஞ்சா லைத் துறை சாலைப்பணி யாளர் சங்கத்தின் சிவ கங்கை மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் மாரி தலைமையில் நடைபெற் றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் வர வேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிர மணியன் அஞ்சலி தீர்மா னங்களை வாசித்தார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சின் னப்பன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். தோழமைச் சங்க நிர்வாகிகள் கண்ண தாசன், பாண்டி , வேலுச்சாமி, முத்துக்குமார், ஜெயபிர காஷ், மாரியப்பன், சசிகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநிலப் பொருளாளர் தமிழ் நிறைவுரையாற்றி னார். மாவட்ட பொருளாளர் முத்தையா நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண் டும். பிஎஃப்எம்சி திட்டத்தில் தனியாருக்கு வழங்கப்பட்ட சாலை பராமரிப்பு பணியை உடனடியாக ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண் டும். சாலைப் பணியாளர் களின் காலிப்பணியிடங் களை பூர்த்தி செய்திட வேண்டும் என்று வலியு றுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.