சிவகங்கை, பிப். 24- சிவகங்கை மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருப்புச்சாமி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். நெல் கொள்முதல் மையங்க ளில் ரூ.40 முதல் ரூ.50 வரை வசூல் செய்யப்படுகிறது. வசூல் செய்வ தைத் தடுக்க முடியவில்லை என்ற னர் விவசாயிகள். இதற்கு பதில ளித்த ஆட்சியர், வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டி ருக்கிறோம். 100-க்கும் மேற்பட் டோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளி நபர்கள் பணம் வாங்கினால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடி யாது என்றார். சிவகங்கை மாவட்டம் கண் மாய்கள் நிறைந்த மாவட்டம். கண்மாய்களில் கருவேல் மரங்கள் நிறைந்திருக்கிறது. கண்மாய்களும் தூர்வாரப் படவில்லை.கன்மாய்களில் இருக்கக் கூடிய மடைகள் சரி பார்த்து ஒழுங்கு படுத்தப்படவில்லை. வைகை ஆற்றில் இடது பிரதான கால்வாய் வலது பிரதானக் கால்வாய்களில் கருவேல்மரம் நிறைந்திருக்கிறது. இவற்றை அகற்ற வேண்டும். மானாமதுரை வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணை உள்ளது. பார்த்திபனூர் மதகானை இடது பிரதானக் கால்வாய் பாச னப்பகுதி சிவகங்கை மாவட்டத்தி ற்கு உட்பட்ட பகுதி. ஆனால், தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளது. பார்த்திபனூர் மதகு அணையை சிவகங்கை பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், வறட்சியால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அரசு உத்தரவு வந்த வுடன் வறட்சி நிவாரணம் வழங்கப் படுமென்றார்.