சேலம் ஜூலை 30- ஏற்காடு அரசு பள்ளி யில் தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டு, சிதலமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை புதிதாக கட்டித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலம் மாவட்டம், ஏற்காட்டை அடுத்த புளியங்கடை பகுதியில் உள்ள பள்ளியின் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் அப்பள்ளியின் கட்டிடங்கள், மழைநீர் உள்ளே சென்று, கட்டிடம் இடிந்து விடும் நிலையில் இருந்தது. இதனை ஆய்வு செய்த அமைச்சர், உடனடியாக புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், உடனடியாக சேலம் சுற்றுலா மாளிகைக்கு வந்த அமைச்சர், பள்ளி கட்டிட பணிக்கான உத்தரவை சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் வழங்கினார். இதில், கூடுதல் ஆட்சியர் சி.பாலச்சந்தர், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.