சிவகங்கை,பிப்.18- இயற்கை வளங்களை பாதுகாப்பது தற்போது முக்கியத்துவமானதாக உள்ளது என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி கூறினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வேதியியல் துறையின் சார்பில் வேதி யியல் தொழில்நுட்பங்களின் முதன்மை பகுதிகள் என்கிற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேசுகையில், ரசாயனங்களின் அதி கப்படியான பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. நிலையான வளர்ச்சி என்பது சுற்றுச் சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த தேவை யாகும். எனவே மனிதகுலத்தின் வருங் காலத்திற்காக சுற்றுச்சூழல் அச்சு றுத்தலை தீர்ப்பது, இயற்கை வளங்களை பாதுகாப்பது முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்தார். பெங்களூரு தேசிய தர மதிப்பீடு அங்கீ கார அமைப்பின் இயக்குநர் சர்மா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மணிசங்கர், புனே தேசிய வேதியியல் இயக்கத்தின் மூத்த விஞ்ஞானி முனைவர் செல்வராஜ், தொழில் வேதியியல் துறை பேராசிரியர் முனை வர் குருமல்லேஷ்பிரபு, மாநாட்டு ஒருங்கி ணைப்பாளர் முனைவர் கோபு ஆகியோர் கருத்துரையாற்றினர். முனைவர் விஸ்வ நாதன் நன்றி கூறினார். இந்தியா முழு வதுமிருந்து 250 பங்கேற்பாளர்கள், தாய்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து வல்லுநர்களும், இந்திய அளவில் ஏழு நிபுணர்கள் இணைய வழியாக உரையாற்றுகின்றனர்.