சிவகங்கை,பிப்.17- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கீழே கிடந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கேமிராவை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமாரை காவல்துறையினர் மற்றும் சிஐடியு தலைவர்கள் பாராட்டினர். ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், சிஐடியு மாவட்ட செயலாளர் வீரய்யா, டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா ஆகியோர் விஜயகுமாரை பாராட்டினர். இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், நான் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்டிருக்கும் போது பேக்கு டன் கேமிரா சாலையில் கிடந்தது. அதனை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் . காவல்துறையினர் அதை பெற்றுக்கொண்டு என்னை பாராட்டினர்கள். எனக்கு சொந்த ஊர் கீழ்மேல்குடி கிராமம். தற்போது மானாமதுரை பைபாஸ் சாலையில் குடியிருந்து வருகிறோம். பகலில் ஆட்டோ ஓட்டுகிறேன். இரவில் டீக்கடையில் டீ போடும் பணியை செய்து வருகிறேன் என்றார்.