சிதம்பரம், மார்ச் 1- தேசிய அறிவியல் தினம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. அறி வியல் துறை முதல்வர் ராமசாமி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கினார். தில்லி யிலுள்ள ஆராய்ச்சி மற்றும் கூட்டா ண்மைக்கான தெற்காசிய ஆலோசகர் உமா சங்கர்சிங் கலந்து கொண்டு, “தெற்காசியாவில் நெல் விளை விக்கும் முறைகள், வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் நெல் பயிர்களைப் பற்றி யும் விளக்கமாகக் கூறினார். நிகழ்ச்சியில்கடந்த ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சி யாளர் விருது, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள், அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை துணைவேந்தர் வழங்கினார். இதில் வேளாண்துறை முதல்வர் சுந்தரவரதராஜன், பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.