districts

img

இருண்ட ஆட்சியைக் கொடுத்த மோடி - எடப்பாடி; ஜூன் 4க்குப் பிறகு ஆட்சி மாற்றம் உறுதி!

சிதம்பரம், ஏப்.7- மக்களுக்கு இருண்ட ஆட்சி யைக் கொடுத்தவர்கள் யாரென் றால், அது அகில இந்திய அளவில்  நரேந்திர மோடியும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியும் தான் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற ‘இந்  தியா’ கூட்டணியின் மக்களவைத்  தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட் டத்தில் சிதம்பரம் வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவருமான தொல். திருமாவள வன் மற்றும் மயிலாடுதுறை காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர். சுதா ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, முதல்வர் மு.க. ஸ்டா லின் உரையாற்றினார். அந்த உரை யின் பகுதிகள் வருமாறு:

பாஜகவின் கண்ணை உறுத்தும் இடஒதுக்கீடு

இப்போது இரண்டு - மூன்று  தலைமுறையாகத்தான், நம்மு டைய வீட்டில் இருந்து, இன்ஜி னியர்கள் – டாக்டர்கள் – வரு கிறார்கள். அத்தி பூத்தது போன்று  சில ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரி கள் வர முடிகிறது! இதெல்லாம்  பாஜகவின் கண்களை உறுத்து கிறது! இந்த வேலைக்கு இவர்கள்  எல்லாம், இடஒதுக்கீட்டினால் வந்துவிடுகிறார்களே என்று நினைக்கிறார்கள்! ”எரியுதுடி மாலா… ஃபேன போடு” என்று கதறு கிறார்கள்! இடஒதுக்கீட்டை நம்மி டம் இருந்து தட்டிப்பறித்து, நம்மு டைய குழந்தைகள் படித்து வேலை க்குச் செல்வதை கெடுக்க… என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள்! 

பாமக எப்படி  கூட்டணி சேர்ந்தது?
இப்படிப்பட்ட பாஜகவுடன் தான் - பாமக கூட்டணி அமைத்தி ருக்கிறது! சில நாட்களுக்கு முன்பு வரை, விமர்சித்து பேசியவர்கள் இப்போது சேர்ந்திருக்கிறார்கள்! மனசாட்சி உள்ள பாமகவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க  முடியாமல் வேதனையுடன் தலை குனிந்து நிற்கிறார்கள்! பாஜக – பாமக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி! ஆனால், நாங்கள் உரு வாக்கி இருக்கும், இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி!

திமுகவும் - சகோதரர் திருமா வும் பேசும் சமூகநீதிக் கோரிக்கை யை ஏற்று காங்கிரஸ் கட்சி நேற்று  தேர்தல் அறிக்கை வெளியிட்டி ருக்கிறது! சகோதரர் ராகுல் காந்தி  என்ன அறிவித்திருக்கிறார்?

சாதிவாரி கணக்கெடுப்புக்கு உறுதி அளித்துள்ளோம்

“இந்தியா கூட்டணி ஆட்சி  அமைந்ததும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரி யான கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்தச் சட்டத்திருத்தம் செய்  யப்படும். எஸ்.சி.- எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான காலிப்பணி யிடங்கள் ஓராண்டுக்குள் நிரப் பப்படும். எஸ்.சி.- எஸ்.டி., ஓ.பி.சி.  மாணவர்களுக்கான கல்வி உத வித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும். முக்கியமாக, இதே அரியலூரைச் சேர்ந்த அனிதாவை “நீட்”-டுக்குப் பறிகொடுத்தோமே, பல தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரை பலி வாங்கிக்கொண்டு இருந்த நீட் தேர்வு ‘கட்டாயமல்ல’  என்று வாக்குறுதி கொடுத்திருக்கி றார்கள்!

ஜூன் 4-க்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்

இதுமட்டுமல்ல, காங்கிரஸ்  கொடுத்திருக்கும் வாக்குறுதி களில் இன்னும் முக்கியமானவற் றைச் சொல்ல வேண்டும் என்றால்,  பாஜகவின் ஜிஎஸ்டி சட்டம் ரத்து  செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும். திட்டக்குழு  மீண்டும் கொண்டு வரப்படும். பொதுப்பட்டியலில் இருக்கும்  அதிகாரங்களை மாநிலப்பட்டிய லுக்கு மாற்ற ஆய்வு செய்யப்  படும். விவசாய இடுபொருட்க ளுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது. ஏழைப் பெண்களுக்கு ஆண் டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்  கப்படும். ஒரே நாடு - ஒரே தேர்தல்  முறை கொண்டு வரப்படாது. விவ சாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் தரப் படும். ஒன்றிய அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும். மீன வர்களுக்கு மீண்டும் டீசல் மானி யம் வழங்கப்படும். புதிய கல்விக்  கொள்கை, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி திருத்தி அமைக்  கப்படும். இப்படி, ஜூன்-4 தேர்தல்  முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா  கூட்டணி ஆட்சியில் இந்த வாக்குறு திகள் எல்லாம் நிறைவேறப் போகிறது!

இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்!

இவற்றையெல்லாம் அடைய, அமைதியான இந்தியா - வளர்ச்சி யை நோக்கிய இந்தியா உருவாக  - தமிழ்நாட்டில் திமுக தலைமையி லான இந்தியா கூட்டணிக்கு வாக்க ளிக்க வேண்டும்! தனிநபர்களாக நீங்கள் வாக்களித்தால் மட்டும்  போதாது! மக்களிடம் நீங்கள்  சென்று பாஜக ஏன் தோற்கடிக்கப் பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்! 

சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, “அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்” என்று, அகங் காரமாக பேசி மக்களின் முதுகில் குத்தினார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட்  தேர்வை எழுத வைத்தார் பழனி சாமி! மூன்று வேளாண் சட்டங் களை ஆதரித்தார். “எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவா தம் நடத்தத் தயாராக இருக்கி றேன்” என்று உழவர்களின் துய ரத்தைப் பார்த்து ஏளனமாக சிரித்  தார். இந்தியாவிற்கு எப்படி மோடி  இருண்ட ஆட்சியைக் கொடுத்து  இருக்காரோ, அது போன்று இருண்ட ஆட்சியைக் கொடுத்த வர் பழனிசாமி!

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட் டுள்ளார்.