சிதம்பரம், ஜூலை 13- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் கிராமத்தில் உள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை12) இரவு அதே பகுதியைச் சேர்ந்த பரத்ராஜ் ,அக் ஷயா ஆகியோரின் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை (ஜூலை 13) திருமண வரவேற்பில் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீராணந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் தங்கதுரை தலைமையில் மருத்துவ குழுவினர் கிராமத்திலே முகாமிட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனதால் 108 ஆம்பு லன்ஸ் மூலம்.மணவெளி மற்றும் பழஞ்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசகி ( 42),சித்தார்த் (19), ரவி (47),நிலா (14), மணமகள் அட்சயா ( 25), ஹரிஷ், (25),வேம்பு (50) சம்யுத்தா ( 8 ) காஞ்சனா ( 30) விஜயா வின் 4 வயது குழந்தை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரு கின்றனர். இதில் மிகவும் ஆபத்தான நிலை இருந்த மணிவண்ணன், ராஜமானிக்கம் உள்ளிட்ட 10 பேர் சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.