districts

img

“பெற்றோர்களை கொண்டாடுவோம்” மண்டல மாநாடு

தருமபுரி, பிப்.18- தருமபுரியில் “பெற்றோர்களை கொண் டாடுவோம்” என்ற தலைப்பில் தருமபுரி மண் டல மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத் தில், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் “பெற்றோர்களைக் கொண் டாடுவோம்” என்ற தலைப்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய மண் டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தலைமை வகித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் என்ற வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளையும் என் பிள்ளைகளாகவே நான் கருதுகிறேன். படிப் பில் பின் தங்கிய அனைவரும் என் செல்ல  பிள்ளைகளே. அதனால் தான் கல்வியில் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட் டத்தில் இந்த “பெற்றோரை கொண்டாடு வோம்” என்ற மண்டல மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது, எள் றார். இதனைத்தொடர்ந்து, பள்ளிகளுக்கு தங்களது நிலம், அதிக அளவிலான நிதி, பொருட்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட வற்றை தானமாக வழங்கிய தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 100 நன் கொடையாளர்களுக்கு கேடயங்களை வழங்கி அமைச்சர் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்க டேஷ்வரன், எஸ்.சதாசிவம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலு வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.