districts

img

தமிழ்நாடு, கேரள முதல்வர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

கோவை மாநகராட்சி மேயர் முன்மொழிந்தார்

கோவை, ஜூன் 30- தமிழக முதல்வர் கடிதம் அனுப் பிய உடனே கோவைக்கு கூடுதலாக சிறுவாணி குடிநீரை திறந்த கேரள  மாநில முதல்வர் பினராயி விஜயனுக் கும், கோவை மக்களின் தேவை உணர்ந்து செயல்பட்ட தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரி வித்து கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தீர்மா னத்தை முன்மொழிந்தார் கோவை மாநகராட்சி விக்டோ ரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்த குமார் தலைமையில் மாமன்ற சாதா ரண கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. இதில், துணை மேயர் வெற் றிசெல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோவை மாநக ராட்சி மக்களின் குடிநீர் தேவை யினை நிவர்த்தி செய்வதற்காக சிறு வாணி அணையிலிருந்து தேவையான நீரினை பெற்று தந்த தமிழக முதல் வர் மற்றும் குடிநீரினை உடனடி யாக திறந்துவிட்ட கேரள முதல்வர் மற்றும் நகர்ப்புற துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோ ருக்கு இம்மாமன்றத்தின் மூலமாக  நம் அனைவரின் சார்பிலும் மற்றும் கோவை மாநகர மக்கள் சார்பாக  நன்றி தெரிவித்து தீர்மானத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்மொ ழிந்தார். இத்தீர்மானத்தை ஏகமன தாக மாமன்ற உறுப்பினர்கள் வர வேற்று ஆதரித்தனர். இதனைத்தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில், குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கலை ஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி, கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியா வசிய பணிகளை மேற்கொள்ள கூடு தலாக 180 பணியிடங்கள் தோற்று விக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் வழியாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க அனுமதி உள்ளிட்ட 32 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இத்தீர்மானத்தில் மார்க்சிஸ்ட் கட் சியின் மாமன்ற உறுப்பினர் வி.ராம மூர்த்தி பேசுகையில், இத்திட்டம் பழைய நகர பகுதிகளில் மட்டும் தான் முழுமையடைந்திருக்கிறது. சிங்கா நல்லூர், சங்கனூர், கணபதி உள் ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் முழு மையடையவில்லை. பணிகள் முழு மையடையாத இந்த சூழலில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கட்டண நிர் ணயிப்பு தேவையில்லை. இதன்பின்  நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச் சர் கே.என்.நேருவிடம் கலந்தாலோ சித்த பிறகு செய்து கொள்ளலாம் என்றார். இதனையடுத்து, அந்த தீர் மானம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின், 29 ஆவது தீர்மானமாக புதிய பணியிடங்களை தோற்றுவிப்பதற் கான தீர்மானத்தில், துணை ஆணை யாளர் (சுகாதாரம்), செயற்பொறி யாளர், சுகாதார அலுவலர் உள்ளிட்ட  180 புதிய பணியிடங்கள் முன் மொழியப்பட்டிருந்தன. இதில், மாந கரத்தை தூய்மையாக வைக்க பாடு படும் தூய்மை பணியாளர்களையும், மாநகரத்தில் முறையாக குடிநீர் வழங்க ஆப்ரேட்டர்களை நியமிக்க வேண்டும் என வி.ராமமூர்த்தி வலியு றுத்தினார். இதைத்தொடர்ந்து மேயர் கல் பனா ஆனந்தகுமார் பேசுகையில், வார்டு பகுதிகளில் தேவையான குடி நீர் தேவையை தவிர்த்து இதர தேவை களுக்காக தண்ணீர் கிடைக்க தேவை யான ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்படும். குடிநீர் விநியோக பிரச் சனை விரைவில் தீர்க்கப்படும். மண் டல கூட்டங்களில் குடிநீர் வாரிய அதி காரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு குடிநீர் விநியோகம் சீர் செய்ய முழு முயற்சி மேற்கொள் ளப்படும் என்றார்.