districts

வீட்டுமனை இடங்களை மீட்டுத் தரக்கோரி மனை உரிமையாளர்கள் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், ஏப்.18- வீட்டுமனை இடங்களை மீட்டுத்  தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனை உரிமையாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சித்த ராவுத்தன் பாளையம் தண்டபாணி சுவாமி நகரில் 57 மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள் ளது. இந்நிலையில் சில வீட்டுமனை உரிமையாளர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருவதாகவும், 33 மனை பிரிவினர் வீடு கட்ட முடியாமல் காலி இடமாக வைத்திருந்தனர். இந்த இடத்தை சிலர் அபகரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகி றது. இதற்கு அரசு அதிகாரிகள் சில ரும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பது தெரியவருகிறது. எனவே 33 மனைபிரிவைச் சேர்ந் தவர்கள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்தனர். அவர்கள் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தனர். போலீசார் உடனடியாக அவர்களி டம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறிக்க முயன்றனர். இத னால் இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித் தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவும், அரசு அதிகாரிக ளும் அவர்களுக்கு துணை போவ தாகவும் கூறினர். தங்கள் நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவ டிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர  வேண்டும் என அவர்கள் வலியுறுத் தினர்.

போலீஸ் டார்ச்சர்- தீக்குளிக்க முயற்சி

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந் தவர் அருள் பிரகாஷ். திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். கடந்த  2010ஆம் ஆண்டு முதல் திருப்பூரில் தங்கி இருக்கும் இவர் மீது நண்ப ரின் வீட்டில் இருந்து சிலிண்டர் திருடி வந்ததாக மங்கலம் காவல் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டது. அதனை தொடர்ந்து இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் வெவ்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதா கவும், நான்கு மாதம் கோவை மத் திய சிறையில் விசாரணை கைதி யாக இருந்து வந்துள்ளதாகவும், 6  வழக்குகளிலும் தான் சம்பந்தப் படாத நிலையில் தொடர்ந்து தன் மீது  வழக்குகள் பதிவு செய்ய காவல் துறை முயற்சி செய்கிறது. இதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று காவல் துறை மீது குற்றம் சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அருள் பிரகாஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் மண் ணெண்ணையை உடலில் ஊற்றி தீக் குளிக்க முயற்சி செய்தார்.காவல்து றையினர் அவர்களை தடுத்து  நிறுத்தி விசாரணை மேற்கொண்ட னர்.