districts

img

உலராத உரத்தை கொட்டியதால் துர்நாற்றம்: தாராபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம், செப்.8- தாராபுரம் அருகே நிலத்தில் உல ராத உரத்தை கொட்டியதால் துர்நாற்றம்  ஏற்பட்டுள்ளது. அப்புறப்படுத்தக் கோரி  நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தாராபுரம் நகராட்சி சார்பில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என  பிரித்து நுண்ணுயிர் உரம் தயாரித்து, அதை டெண்டர் விட்டுவது வழக்கம்.  டெண்டர் எடுத்தவர் உரம் கேட்கும் நபர் களின் காடு மற்றும் தோட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்.  இந்நிலையில் உப்புத்துறைபாளை யத்தை சேர்ந்த ஒரு தோட்ட உரிமையா ளர் உரம் கேட்டதால் நகராட்சி உர விற் பனையாளர் ஈரப்பதத்துடன் உள்ள நுண்ணுயிர் உரக்கழிவுகளை நிலத்தில்  கொட்டியுள்ளார். இதனால் அப்பகுதி யில் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் குழந்தைகளுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு  வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த உரக்கழிவு களை அப்புறப்படுத்த கோரி பொதுமக் கள் கோரிக்கை வைத்தும் அப்புறப்ப டுத்தப்படவில்லை. இதனால் கோபம டைந்த அப்பகுதி பொதுமக்கள் தாரா புரம் கரூர் சாலையில் திடீர் சாலைமறிய லில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் மற்றும் காவல் ஆய்வா ளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார்  பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரக்கழிவுகளை அப்புறப்ப டுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார். இதையடுத்து சாலைமறியல்  கைவிடப்பட்டது. இதையடுத்து நக ராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத் தும் பணி நடைபெற்றது. இதனால் தாரா புரம் கரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.