districts

img

தலைக்கவசம் அணியாமல் கல்லூரிகளுக்குள் நுழையத் தடை

கோவை, அக்.8- “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி” (No Helmet No Entry) கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் கள் தலைக்கவசம் அணியாமல் வந் தால் அனுமதிக்க வேண்டாம் என  மாநகர காவல் துறை அறிவுறுத்தி யுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல் லும் நபர்கள் தலைக்கவசம் அணியா மல் செல்கையில், விபத்து ஏற்பட்டு  உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், கோவை மாந கர காவல் ஆணையர் அறிவிப்பு  செய்துள்ளார். இதன்படி, திங்க ளன்று கோவை மாநகரம், அவிநாசி  சாலையில் அமைந்துள்ள அனைத்து  கல்லூரிகளின் முதல்வர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில், இருசக்கர வாக னங்களில் வரும் கல்லூரி மாணவர் கள், ஆசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் ஆகியோர் கல்லூரிக்குள் வரும்பொழுது தலைக்கவசம் கட் டாயம் அணிய வேண்டும். தலைக் கவசம் அணியாமல் வந்தால் அவர் களை கல்லூரி வளாகத்திற்குள் அனு மதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்து கல் லூரி முதல்வர்களும் இதனை ஏற் றுக்கொண்டு, உடனடியாக அமல் படுத்துவதாக உறுதியளித்தனர். அதனடிப்படையில் ஒவ்வொரு கல் லூரி நுழைவாயில் முன்பும் “நோ ஹெல்மெட் நோ என்ட்ரி”(No Helmet, No Entry) என்ற வாசகம் கொண்ட பதாகைகள் வைக்கப்பட் டுள்ளது. சம்மந்தப்பட்ட கல்லூரி  நிர்வாகம் அவர்களது வளாகத்திற் குள் இருசக்கர வாகனத்தில் வருப வர்கள் தலைகவசம் அணிந்து கல் லூரி வளாகத்திற்குள் வருவதை உறுதிபடுத்த வேண்டும். வரும் நாட்களில் இத்திட்டமா னது இதர முக்கிய சாலைகளில் அமைந்துள்ள கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத்தில் பயிலும் பணிபுரியும் மாணவர்கள், பணியாளர்களின் உயிர்களை பாது காக்கும் பொறுப்பு தங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து இம்முன் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.