districts

img

சிபிஎம் பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ஜி.சக்திவேல் தேர்வு

தருமபுரி, நவ.6- மார்க்சிஸ்ட் கட்சியின் பென்னாகரம் கிழக்கு ஒன்றியச்  செயலாளராக ஜி.சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கிழக்கு ஒன்றிய  2 ஆவது மாநாடு, சின்னகட மடை தனியார் திருமண மண்ப டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவ ரங்கத்தில் புதனன்று நடைபெற்றது. ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் எம்.சாம்ராஜி, பி. சக்கரவேல், எம்.கண்ணம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர்கள் சி. சின்னராஜ், கே.வெங்கடாச்சலம் ஆகியோர் செங்கொடியினை ஏற்றி வைத்தனர். டி. புஷ்பாகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். முனியப்பன் (எ) மோட்டூரான் வரவேற் றார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். ஒன் றியச் செயலாளர் ஜி.சக்திவேல் அறிக்கையை முன்வைத்தார். மூத்த தோழர்  பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.மாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இம்மாநாட்டில், காவேரி உபரிநீர் திட்டத்தை  விரைந்து செயல்படுத்த வேண்டும். ஏரி,  குட்டைகளில் உள்ள முட்புதர்களை  அகற்றி ஆழப்படுத்த வேண்டும். மஞ்சநாயக் கனள்ளி, கலப்பாடி ஊராட்சி களைச் சேர்ந்த பட்டியலின மற் றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். வன  விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  வேண்டும். கடமடை பகுதிநேர  கால்நடை மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக  தரம் உயர்த்தி கட்டமைப்பு வச திகளை ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டு காலமாக புறம்போக்கு நிலங்க ளில் விவசாய சாகுபடி செய்து வரும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்க  வேண்டும். அரகாசன அள்ளி ஊராட்சி, எர்ரப் பட்டி ஆஞ்சிநேயர் கோவில் பகுதியில்  வசிக்கும் மக்களுக்கு, வனத்துறையின் விதியை தளர்த்தி நிலப்பட்டா, மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பென்னாக ரம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ஜி.சக்திவேல் மற்றும் 13 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் நிறைவுரையாற்றினார். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.செல்வம் நன்றி கூறினார்.