districts

img

சிபிஎம் பாப்பாரப்பட்டி பகுதிச் செயலாளராக ஆர்.சக்திவேல் தேர்வு

தருமபுரி, நவ.5- மார்க்சிஸ்ட் கட்சியின் பாப் பாரப்பட்டி பகுதிச் செயலாள ராக ஆர்.சக்திவேல் தேர்வு செய் யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதிக்குழு 4  ஆவது மாநாடு, பிக்கிலி கிரா மத்தில் தோழர் சீத்தாராம் யெச் சூரி நினைவரங்கத்தில் திங்களன்று நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.சின்னசாமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர். சக்திவேல், சி.சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் வி. கோவிந்தசாமி செங்கொடியை ஏற்றி வைத் தார். பகுதிக்குழு உறுப்பினர் சி.அன்பரசு வர வேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ். ராஜாமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிக்குழு செயலாளர் இரா.சின்னசாமி அறிக்கையை முன்வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், திருமல் வாடி - கொல்லப்பட்டி இடையே மாவட்ட  சாலையை அகலப்படுத்தி, குதிரைகட்டு கன வாய் உயரத்தை குறைக்க வேண்டும். பிக் கிலி சுகாதார நிலையத்தை தரம்  உயர்த்த வேண்டும். பாப்பாரப் பட்டியிலிருந்து மலையூர் ஸ்ரீகோபால் சுவாமி கோவில் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும். மேட்டுக்கொட்டாய் - மலையூர், பூதிநத்தம் சக்கி லிநத்தம், பெரியூர் - பளந் தூரம்மன் கோயில், பெரியூர்-தோட்டபள்ளம், புதுக்கரம்பு மலைக்கொட்டாய், குறவன்தின்னை  நரிக்குட்டை, கொல்லப்பட்டி - தோல் குட்டை  புதூர் மாரியம்மன் கோவில், எரிமலை -  கோட்டூர் மலை இடையே தார்ச்சாலை  அமைக்க வேண்டும். பிக்கிலியில் புறக்கா வல் நிலையம் அமைக்க வேண்டும். சின் னாற்றின் குறுக்கே, கூட்டாறு பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் பாப் பாரப்பட்டி பகுதிக்குழு செயலாளராக ஆர். சக்திவேல் மற்றும் 13 பகுதிக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் கே.லோகநாதன் நன்றி கூறினார்.