ஈரோடு, நவ.11- தனி நபருக்கு ஆதரவாக, அர சுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வட்டாட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வேம்பத்தி கிராமம், கூலிவ லசில் சுமார் 300 பட்டியலின குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரையொட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலி ருந்து மழை நீர் வெளியேறும் வழி யில் தனி நபர் வண்டிப்பாதை அமைக்க முயற்சித்தார். இதனால், தங்கள் குடியிருப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்று வந்தது. உரிய தீர்வு காணப்படாத நிலையில், எதிர் தரப்பினருக்குத் தெரியாமல் நீதி மன்றம் சென்றார். இந்நிலையில், தனி நபருக்கு சாதகமாக நீதிமன்றத்தின் உத்த ரவு என்ற பெயரில் வருவாய் வட் டாட்சியர் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் சென்று பட்டியலினத்தினர் மீது அடக்கு முறையை ஏவி 200 பேரை கைது செய்தனர். அமைதியாக நியாய மாக தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்த பொதுமக்களை பல வந்தமாக கைது செய்ததில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. பட்டி யலினத்தினர் பிரச்சனையில் சுமூக தீர்வு காணப்படாமல் ஒருதலைப் பட்சமான வருவாய் வட்டாட்சிய ரின் நடவடிக்கையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான வரு வாய் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து திங்களன்று அந்தி யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூசிஸ்ட் கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருசேகன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் பி.பி. பழனிசாமி, அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து, ததீஒமு தாலுகாச் செயலா ளர் ஏ.கே.பழனிசாமி, கூலிவலசு சிபிஎம் கிளைச் செயலாளர் மற் றும் மாவட்டக்குழு உறுப்பின்ர் எஸ். மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.