ஊழியர் விரோத போக்கினை கடைபிடிக்கும் மண்டல பூச்சியியல் அலுவலர் சாந்தியை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வ ராணி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, மாவட்டப் பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.