கோவை, செப்.11- கோவை உக்கடம், பெரியகுளத் தில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் அமைப்பதற்கான சோதனை ஓட்டம் திங்களன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல் வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் கட்டுப் பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங் குளம், செல்வசிந்தாமணி குளம், செல் வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்களை புனர மைத்து, மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டு வருகின்றன. குறிப்பாக, குளக் கரைகளில் நடைபாதைகள், குழந் தைகளுக்கான பொழுதுபோக்கு அம் சங்கள், பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள் ளன. அதேபோல மக்கள் அதிகம் கூடும் பந்தயசாலை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாதிரி சாலை களை அமைப்பதோடு, மக்களை கவரும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பந்தய சாலை பகுதியில் உள்ள பிரமாண்ட மீடியா டவர், குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் 20 அடி உய ரத்தில் அமைக்கப்பட்டு வரும் திரு வள்ளுவர் சிலை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிளாக் டவர், தேவதை செல்பி ஸ்பாட் உள்ளிட் டவை கோவையின் புதிய அடையா ளங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, உக்கடம் பெரிய குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ.62.17 கோடி திப்பீட்டில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உக்க டம் பெரியகுளத்தின் மேற்கு கரை யில் ‘ஜிப் லைன்’ மற்றும் ‘ஜிப் சைக் கிள்’ சேவை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் சோதனை ஓட்டம் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் முன்னிலை யில் திங்களன்று நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஜிப் லைனில் மூன்று பேர் தொங்கி செல்லும் வகையிலும், ஜிப் சைக்கிளில் மூன்று பேர் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முழுமையான பாதுகாப்பு அம்சத்துடன் முடிக்கப்பட்ட பணி களை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து கேட்டறிந்தார். இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து, பொது மக்கள் பயனபாட்டிற்கு வர உள்ள தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். முதல்முறையாக 200 மீட்டர் தொலைவு மற்றும் தண்ணீர் மேல் செல்லும் முதல் ‘ஜிப் லைன்’, ‘ஜிப் சைக்கிள் ரைடு’ கோவையில் அமைக் கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.