கோவை, அக்.13- ஒன்றிய அரசு பணிக்கான போட்டி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிஎஸ் என்எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் அரசு பணியாளர் களுக்கான போட்டி தேர்வை மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி ஒன் றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்ட இயக்கத்தை முன்னெ டுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறைகூவல் விடுத்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் பிஎஸ் என்எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக் கைக்கு எதிராக முழக்கங்களை எழுப் பினர். மேலும், நாட்டில் பல்வேறு மொழி பேசும் மாநிலங்கள் உள்ள நிலையில், ஒன்றிய அரசின் பணிக் கான போட்டி தேர்வில் இந்திக்கு முக் கியத்துவம் அளிப்பது நயவஞ்சகமா னது. அனைத்து போட்டி தேர்வுகளை யும் அந்தந்த மாநில மொழிகளி லேயே நடத்தப்பட வேண்டும் என்ற னர். முன்னதாக வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதைத்தொ டர்ந்து மாவட்ட ஆட்சியர் நேர்முக அதிகாரியிடம் வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.