நாமக்கல், ஜூன் 26- புதிய தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என வாலிபர் சங்க எருமப்பட்டி ஒன்றிய மாநாடு வலியுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நாமக்கல் மாவட் டம், எருமப்பட்டி ஒன்றிய 3 ஆவது மாநாடு லட்சுமி மஹா லில் எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மு.து.செல்வராஜ் உரையாற்றினார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் எம்.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். எருமப்பட்டியில் இருவழிப்பாதை அமைக்க வேண்டும். நகர்புற வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். மேட்டூர் அணை நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எருமப்பட்டி ஒன்றியத் தில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். எருமப்பட்டியிலிருந்து சேந்தமங்கலம், வலையப்பட்டி, தொட்டியம் ஆகிய ஊர் களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றிய தலைவராக வீ.பிரபு, செயலாளராக கதிர், பொருளாளராக பி.பானுமதி, துணைத்தலைவராக ஸ்ரீதர், துணைச்செயலாளராக கணேஷ் உட்பட 15 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.