திருப்பூர், ஆக. 31 - கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த வழகில், கைது செய்யப்பட்டி ருந்த பள்ளி தாளாளர் உள்ளிட்டவர்க ளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் வாலிபர் ஒருவர் செல் போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். திருப்பூர் பி.என்.ரோடு மில்லர் பஸ் நிறுத்தம் அருகே 50 அடி உயர கட்டிடத்தின் மேல், 50 அடி உயரத் துக்கு செல்போன் கோபுரம் உள்ளது. செவ்வாயன்று பிற்பகல் 3 மணி அள வில் வாலிபர் ஒருவர் இந்த செல் போன் கோபுரம் மீது ஏறி முழக்கம் எழுப்பியபடி இருந்தார். அந்த வாலி பர் துண்டு பிரசுரங்களை வைத்திருந் தார். இதை அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் கவனித்து அவரை கீழே இறங்கி வருமாறு கூறினார்கள். ஆனால் அவர் இறங்கி வர மறுத்து தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந் தார். உடனடியாக இது குறித்து திருப் பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் ஆய் வாளர் உதயகுமார் மற்றும் போலீ சார் விரைந்து சென்று செல்போன் கோபுரத்தின் மேல் இருந்த வாலிபரி டம் இறங்கி வருமாறு கூறினார்கள். அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த வாலிபர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி னார். அவரிடம் காவல் துறையினர் விசாரித்ததில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராம் காலனியை சேர்ந்த மனோஜ்குமார் (20) என்ப தும், பனியன் பிரிண்டிங் பட்டறை தொழிலாளியான இவர், மக்கள் பாது காப்பு அமைப்பின் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் என்பதும் தெரியவந்தது. மனோஜ்குமார் கூறும்போது, ‘கள்ளக்குறிச்சி மாவட் டம் கனியாமூர் தனியார்பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்திருப்பதால் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்து, விசாரித்து உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நீண்ட காலமாக 20 ஆண் டுகளுக்கும் மேலாக கோவை சிறை யில் வாடிக்கொண்டிருக்கும் முஸ் லிம் சிறைவாசிகளை கருணை அடிப் படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டேன்’என்றார். துண்டு பிரசுரங்களிலும் இது குறித்த வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதைத்தொடர்ந்து மனோஜ்குமாரை போலீசார் வாக னத்தில் ஏற்றி, போலீஸ் நிலையத் துக்கு அழைத்துச் சென்று விசாரித் தனர்.