உடுமலை, ஜன.29 - உடுமலை தாலுகா ஆண் டியகவுண்டனூர் ஊராட்சி யில் இருக்கும் உரல்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, வாலிபர் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று மனு அளித்தனர். கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஆண்டியக வுண்டனூர் ஊராட்சி உரல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர், பொது சுகாதாரம், தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் செவ்வாயன்று ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண் டும். நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். உரல்பட்டி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் அரசு கட்டிடங் களான கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலைக்கடை, தபால் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். அதே போல் மாயனத்தில் சுற்றுச்சுவர், எரி மேடை மற்றும் காத்திருப்பு கூடம் கட்ட வேண் டும். குறிப்பாக இப்பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளின் மேல் செல்லும் உயர் ரக மின்னழுத்த கம்பிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை செய்து தரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர். முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உடுமலை தாலுகா முன்னாள் செயலாளர் வெ.ரங்கநாதன் தலைமையில் உடுமலை ஒன்றியத் தலைவர் ஆ. இராம சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் உரல்பட்டி கருப்புசாமி ஆகியோர் உடுமலை வட்டாட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள்.