தருமபுரி பிப்-11, வீடில்லா மக்களுக்கு, இலவச வீட்டு மனைபட்டா கேட்டு வாலிபர் சங்கத்தினர் காரிமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட பாலக் கோடு மற்றும் காரிமங்கலம் வட்டங்களில் சொந்தமாக வீடு இன்றி பல ஆயிரம் குடும் பங்கள் உள்ளது. பெரும்பகுதி விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ள இவர்க ளுக்கு, வீடு என்பது கனவாகவே உள்ளது. எனவே, வீடு இல்லா மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனே வழங்க வேண் டும். மேலும் பாலக்கோடு மற்றும் காரிமங்க லம் வட்டத்தில் கோவில் மானியம் நிலத்தில் வீடு கட்டி குடியிருக்கும் ஏழை எளிய மக்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி செவ்வாயன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க வட்ட துணைச் செயலா ளர் எஸ்.ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எம். அருள்குமார், வட்டச் செயலாளர் பி.கோவிந்த சாமி, மாவட்ட துணைத்தலைவர் மீரா, வட்ட தலைவர் கோபி, வட்ட நிர்வாகிகள் தேவி ஸ்ரீ, அஜித்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி. பாண்டியம்மாள், வாலிபர் சங்க முன்னாள் வட்ட செயலாளர் பி.காரல்மார்க்ஸ் ஆகி யோர் உரையாற்றினர்.