திருப்பூர், ஜூலை 25 - திருப்பூர் மாநகரில் எஸ்.ஆர்.சி. மில் பாலம், மண்ணரை கேட்டுத் தோட்டம் பாலம் மற்றும் அணைப்பாளையம் பாலம் ஆகிய பாதியில் நிற்கும் பாலங்கள் பணியை விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகர 22 ஆவது மாநாடு தோழர் கே. தங்கவேல் நினைவகத்தில் மாந கர தலைவர் துரை.சம்பத் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஓம்பிரகாஷ் மாநாட்டைத் தொடக்கி வைத் தார். வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.ஞானசேகர், சிஐடியு பனியன் தொழிற்சங் கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், மாதர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ஈ.வளர்மதி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செய லாளர் வை.ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருப்பூர் வடக்கு மாநகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். திருப்பூர் ரயில் நிலையத்தில் வாகன நிறுத் தங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகி றது. இதை முறைப்படுத்த வேண்டும் அல்லது அரசே ஏற்று நடத்த வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குமார் நகர் சாமுண்டிபுரம் சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். பள்ளி நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புஷ்பா சந்திப்பு அவிநாசி சாலையில் பேருந்து இயக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் ஊழியர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். பாலங்கள் பணியை நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு மாநகரத் தலைவர் சே.கண்ணன், மாநகரச் செயலாளர் எஸ்.விவேக், பொருளாளர் தி.கிருத்திகை வாசன் உட்பட துணை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். முன்னதாக இம்மாநாட்டில் வாலிபர் சங்க மாநாட்டு கொடியை மாநில செயற்குழு உறப்பினர் பா.கெளசல்யா பெற்றுக் கொண் டார். இம்மாநாட்டில் வடக்கு மாநகர பகுதிக ளுக்கு உட்பட்ட பிரதிநிதிகள் 90 பேர் பங்கேற் றனர். நிறைவாக தி.கிருத்திகை வாசன் நன்றி கூறினார்.