கோவை, பிப்.9- பொய் வழக்கிலிருந்து வாலிபர் சங்கத் தினரை நீதிமன்றம் விடுதலை செய் துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டனர். இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக மெங்கும் பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரணை கோரி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கோவை தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அன்றைய மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க நிர்வாகிகள் பாலசந்திர போஸ், கே.எஸ்.கனகராஜ், எஸ்.பாரதி, ஸ்டாலின் உள்ளிட்ட 15 பேர் மீது எடப்பாடி பழனிச்சாமி அரசு பொய் வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு கடந்த நான்காண்டுகளாக நடைபெற்ற நிலையில், வியாழனன்று கோவை மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் 15 பேரும் விடுதலை செய் யப்பட்டனர். இவ்வழக்கினை திறம்பட வாதாடிய வழக்கறிஞர் கோபால் சங்கரை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.